சீன மாணவரை ஏமாற்றி, 3 லட்ச ரூபாயை, சவாரி கட்டணமாக வாங்கிய, டாக்சி டிரைவரை, அமெரிக்க போலீசார் தேடி வருகின்றனர். சீனாவை சேர்ந்த, 18 வயது மாணவர், அமெரிக்காவின், இல்னாய்ஸ் பல்கலை கழகத்தில் படிப்பதற்காக, கடந்த மாதம், 20ம்தேதி, சிகாகோ நகருக்கு வந்தார்.
விமான நிலையத்திற்கு வெளியே, வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த, சீன மாணவரை, டாக்சி டிரைவர் ஒருவர் அணுகியுள்ளார். "பஸ்சில் சென்றால் நீண்ட நேரம் ஆகும்; இங்கிருந்து இல்னாய்ஸ் பல்கலைகழகம், 241 கி.மீ.,தூரம் உள்ளது. 66 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பல்கலைக்கு அழைத்து செல்கிறேன்' என, டாக்சி டிரைவர் தெரிவித்தார். வேறு வழியில்லாமல், அந்த டாக்சியில் பயணித்தார் சீன மாணவர். பல்கலை கழக வளாகத்தில் மாணவரை இறக்கி விட்ட, டிரைவர், 3 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர், "அவ்வளவு பணம் என்னிடம் இல்லை' என, கூறி, தன்னிடமிருந்த, 2.90 லட்ச ரூபாயை கொடுத்து விட்டு சென்றார். இந்த விஷயத்தை அறிந்த, பல்கலைகழக அதிகாரிகள், 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற வேண்டிய டாக்சி டிரைவர், மாணவரை ஏமாற்றியது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து பல்கலை கழக அதிகாரி, குறிப்பிடுகையில், "இந்த மாணவர் ஏன், கையில் இவ்வளவு பணத்தை வைத்திருந்தார். போலீசிடம் புகார் தெரிவிக்காமல் எதற்காக, டிரைவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்தார் என்பது தெரியவில்லை.மொபைல் போனையும் டாக்சியில் தவறவிட்டுள்ளார்' என்றார்
விமான நிலையத்திற்கு வெளியே, வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த, சீன மாணவரை, டாக்சி டிரைவர் ஒருவர் அணுகியுள்ளார். "பஸ்சில் சென்றால் நீண்ட நேரம் ஆகும்; இங்கிருந்து இல்னாய்ஸ் பல்கலைகழகம், 241 கி.மீ.,தூரம் உள்ளது. 66 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பல்கலைக்கு அழைத்து செல்கிறேன்' என, டாக்சி டிரைவர் தெரிவித்தார். வேறு வழியில்லாமல், அந்த டாக்சியில் பயணித்தார் சீன மாணவர். பல்கலை கழக வளாகத்தில் மாணவரை இறக்கி விட்ட, டிரைவர், 3 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர், "அவ்வளவு பணம் என்னிடம் இல்லை' என, கூறி, தன்னிடமிருந்த, 2.90 லட்ச ரூபாயை கொடுத்து விட்டு சென்றார். இந்த விஷயத்தை அறிந்த, பல்கலைகழக அதிகாரிகள், 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற வேண்டிய டாக்சி டிரைவர், மாணவரை ஏமாற்றியது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து பல்கலை கழக அதிகாரி, குறிப்பிடுகையில், "இந்த மாணவர் ஏன், கையில் இவ்வளவு பணத்தை வைத்திருந்தார். போலீசிடம் புகார் தெரிவிக்காமல் எதற்காக, டிரைவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்தார் என்பது தெரியவில்லை.மொபைல் போனையும் டாக்சியில் தவறவிட்டுள்ளார்' என்றார்